Monday, October 22, 2012

கவிதைகள் - 1

நீ சூடிய பூவெல்லாம் என்ன பெயர் வைத்து கொள்ளும்?

கடவுளின் பேனா முள்ளின் ஓவியம் நீ எவ்வித கிறுக்கலும் இல்லாமல்!!


இப்போழுதே உன் காதலை கொடுத்து விடாதே
இன்னும் எழுத வேண்டிய கவிதைகள் நிறையவே இருக்கிறது!!

வித விதமாக நீ அணியும் ஆடைகளை விட வித விதமான உன் முக பாவமே அதிகம் வசீகரிக்கிறது!!


அடிக்கடி பார்க்காதே
அத்தனை வேகம் இல்லை என்னிடம்
கவிதை எழுதுவதற்கு!!

நீ தந்த காதலில் கவிதை எழுதுகிறேன் கவிதையை உனக்கு சமர்பித்து விடுறேன் காதலை எனக்கு சமர்பித்து விடு!!

வித விதமான வண்ணங்களில் நீயும்!!
வித விதமான எண்ணங்களில் நானும்!!

தவழுந்து செல்கிறதா இல்லை தங்கி விட பார்க்கிறதா - உன் கூந்தலில் பூக்கள்!!

ஒரு புள்ளிமான் புள்ளி வைத்து கோலம் போடுகிறதே#அடடே ஆச்சிரிய குறி!!

நீ பேருந்தில் ஏறினால் மொக்கை பேருந்துக்கும் ரெக்கை முளைத்து விடுகிறது!!!

மென்பொருளில் ஓர் அழகிய பெண்பொருள்!!

நீ வெட்டி விட நினைக்கும் பொழுதெல்லாம் வளர்ந்து கொண்டு இருக்கிறது எனது காதல் வெட்டி விடும் மரத்தை போல

நீ இருக்கையில் நிலவெதற்கு கடத்த சொல்கிறேன் கடவுளிடம்!!

அவள் வேண்டும் என அடம் பிடிக்கும் காதலை என்ன சொல்லி சமாளிப்பது!!

திருடிய இதயங்களை என்ன செய்வார்கள் பெண்கள்?

விழியா வீணையா இப்படி மீட்டுகிறாய்!!

இதயங்கள் இடம் மாறும் போது தடயங்கள் வைத்துக்கொள்ளுங்கள்!!

உன் கன்னகுழிகளில் நம் குழந்தைகள் எப்பொழுது பதுங்கி விளையாடுவது!!

விழி மொழியில் என் காதலை கொஞ்சம் வழி மொழியேன்!!

விடுபட்ட காதல்களில் நம் காதல்!!

ஒவ்வொரு நாளும் உடைந்து சிதறும் இதயத்தை எடுத்து ஒட்டவே நேரம் போதவில்லை!!

அண்மையில் அருகாமையில் ஒரு பெண்மயில்!!

பொங்கி வழியும் ரத்தத்தை உடல் பார்த்து கொள்கிறது பொங்கி வழியும் காதலை நீ பார்த்து கொள்ளேன்!!

உனை பார்க்கும் பொழுதெல்லாம் கன்னத்தில் போட்டு கொள்ளவா இல்லை கட்டி பிடித்து முத்தமிடவா?#குழந்தையா தெய்வமா?குழம்பி போகிறேன்!!

உடைத்து விட்டு சென்ற இதயத்தை ஒட்ட வைத்து கொண்டிருக்கிறேன்!!

முத்தமிடுகிறாயா இல்லை மூச்சை நிறுத்துகிறாயா!!

தேவதை (தேவை இல்லாமல்)வதை செய்கிறாள்!!

சேலையை நீ கட்டி கொண்டு இருக்கிறாயா? இல்லை சேலை உன்னை கட்டிக்கொண்டு இருக்கிறதா?

பெண்களிடம் ஈர்ப்பதில் தொடங்கி தோற்ப்பதில் முடிவடைகிறது!!

பிறந்து சில தினங்களில் இறந்து விட்டது காதல் கைகுழந்தை!!

ஒரே ஒரு பார்வையை வீசி ஒட்டுமொத்த உயிரையும் எடுத்து கொண்டு அது என்னிடம் இல்லை என்று சொல்ல எப்படி முடிகிறது உன்னால்!!

எந்த பெண்ணிலும் உன் சாயல் தெரிகிறதா என்றே தேடுறேன்!!

பார்க்க வைத்து பழக வைத்து உருக வைத்து கிறங்க வைத்து கடைசியில் உறங்கவும் வைத்து விடுகிறாள் கல்லறையில்.#காதலி

ஒரு பேரழகி தேரழகியாகிறாள்!!!!

கடும் சோகத்தை காட்டினாலும் கடும் கோபத்தையே காட்டுகிறாள் காதலி!!

ஒரு புன்னகை பூவே பூ வைத்து இருக்கிறதே!அடடே ஆச்சிரியகுறி

காதல் மலர்ந்து நிற்கிறது எடுத்து சூடி கொள்ளேன்!!

நீ அழகியா பேரழகியா கண்டுபிடிப்பதற்குள் கடந்து விடுகிறாயே!!

கற்பனை ஆயிரம் விற்பனை ஆயிரம்#காரணம் ஆயிரம்

தீண்டுவதா தீண்டாமல் இருப்பதா உடல் மொழியில் உயிரெடுக்கிறாயே!!

எங்கு இருந்தாலும் தேடி கண்டுபிடித்து விழிகளை பார்க்கும் வித்தையை எங்கு தான் கற்று கொண்டாயோ!!

No comments:

Post a Comment