Thursday, July 19, 2012

கீச்சுகள் - 1

ஒரு பொண்ணு வந்து என் வாழ்க்கையே பொரட்டி போட்டுடுச்சி. இனிமே நான் குப்புறத்தான் படுக்கணும்!!

கண்ண மூடி தியானம் பண்றேன்னு உட்கார்ந்த இப்ப வரைக்கும் இருட்டா தான் இருக்கு. நான் எல்லாம் எப்ப கடவுள பாக்குறது!!

எப்போதும் ஒரு பெண் துணை தேவைப்படுகிறது அன்னையாக காதலியாக நண்பியாக குழந்தையாக. ஆனால் எல்லா உறவுகளிலும் காமம் வழிவதில்லை!!

உன்ன நினைக்கும் போது எல்லாம் என்ன சுத்தி பட்டாம்பூச்சிக்கு பதிலா கரப்பான்பூச்சி தான் பறக்குது!!

என்ன டிரஸ் கொடுத்தாலும் போடறவங்க பொண்ணுங்க. என்ன சரக்கு கொடுத்தாலும் அடிக்கிறவங்க பசங்க!!

நல்லவேளை என் வாழ்க்கைக்கு சக்கரம் இருக்கிறது. இல்லையென்றால் அதை நகர்த்துவதே பெரும் கடினமாய் போய் இருக்கும்!!

கடையில் இன்று ஒரு பாத்திரம் வாங்கி வந்தேன். அது நம்பிக்கை பாத்திரமாக இருக்குமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்!!

விவேகானந்தர் கேட்ட நூறு அல்ல. ஆயிரம் இளைஞர்கள் இன்று இருக்கிறார்கள். ஆனால் ஒரு விவேகானந்தர் கூட இல்லை என்பது வருத்தமே.

பேன்ட் ஷர்ட் போட்டா மீச முளைச்சிடும்ன்னு பொண்ணுங்க நினைக்க கூடாது!!

பெண்கள் குறைவாய் சாப்பிடுகிறார்கள் அதிகமாய் பேசுகிறார்கள்#A Medical Miracle!!

மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பு தன்னை ஒரு முறை விமர்சித்து கொள்வது நல்லது!!

வெறும் இட்லி சாப்பிடுவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது bachelor வாழ்க்கை# ஒரு கார சட்னி ஒரு தேங்கா சட்னி ஒரு வெங்காய சட்னி இல்லாமல்!!

கடவுளின் முட்டாள்தனம் மனிதன்!!
மனிதனின் புத்திசாலித்தனம் கடவுள்!!


 

No comments:

Post a Comment