Saturday, July 21, 2012

கீச்சுகள் - 4

மனசாட்சி குப்பையிலும் குப்பை எல்லாம் மனசிலும் இடம் மாறி இருக்கிறது 

சுய ஒழுக்கத்துடனும் நேர்மையான எண்ணகளுடனும் இருப்பவர்களே தற்காலத்தில் சைக்கோ எனப்படுகிறார்கள்

ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ஆனா நாய் வளக்கல ஏன்னா அந்த நாயா தான் த்ரிஷா வளக்குறாங்களே 

பாராட்டுவதற்கு யோசிக்கும் நம்மில் பலர் விமர்சனம் செய்வதற்கு அவ்வளவாக யோசிப்பதில்லை 

வெலவாசிய பார்த்தா பேசமா காட்டுவாசிவே இருந்துடலாம் போல

வாழ்க்கையில் மட்டுமல்ல பேருந்தில் கூட ஒரு இடம் பிடித்து செட்டில் ஆக முடியவில்லை#இளைஞனின் வாழ்க்கை

என்னை யாரும் பாராட்ட முன் வராததால் தனக்கு தானே பாராட்டும் திட்டத்தை அறிமுக படுத்திகிறேன் 

இட்லி மேல சட்னி ஊத்தினாலும் சட்னி மேல இட்லிய போட்டாலும் நனைய போறது என்னவோ இட்லி தான்#தத்ஸ்

பேருந்துதில் கூட்டநெரிசலில் வாழ்க்கையை புரட்டிபோடும் sms அனுப்புகிறார்கள் பெண்கள்#என்ன பண்ற செல்லம்ன்னு

எப்ப கல்யாண சாப்பாடு போட போறன்னு கேக்குறவங்க பொண்ணு இருக்கு கட்டிக்கிறியான்னு கேட்க மாட்றாங்க 

துணி துவைக்க கஷ்டமா இருக்குனு தான் பொண்ணுங்க dressஅ கொரசிக்கிறாங்க அதுல என்ன தப்பு? அல்லாட்டி நீங்க தொவச்சி கொடுங்க பாப்போம்

விட்டத பிடிக்கிறேன் பிடிச்சத விடறேன்#மூச்சு 

பெரும்பாலும் புத்திசாலிதனமான முட்டாள்களே அதிகம் தென்படுகிறார்கள் 

கல்யாணம்ங்கிறது கருவாடு மாறி நல்ல இருக்குனு சொல்ல முடியாது நல்ல இல்லனும் சொல்ல முடியாது 

பேசாம இருக்கிறது தான் தகுதின்னா எனக்கு கூட பிரதமர் பதவி தரலாம்

நாம என்ன தான் விழுந்து விழுந்து படிச்சாலும் எக்ஸாம்ல உட்கார்ந்து தான் எழுதணும்#தத்துபித்துவம் 

garbage collectionல காட்ற அக்கறைய கொஞ்சம் எப்படி குப்பய கொட்றதுன்னு அக்கற காட்டினா நல்ல இருக்கும்

டிராபிக்கில் தன் பங்கும் உள்ளது என்பதை மறந்தே சொல்கிறார்கள்#ச்சே என்ன டிராபிக் 

ஆண்களுக்கு உதவினா உபதேசம் செய்றாங்க பெண்களுக்கு உதவினா சொத்தையே எழுதி வைக்கிறானுங்க 

android application developmentக்கு என்னென்ன tool வேணும்ன்னு சொல்லிட்டு கடைசியா கொஞ்சம் மூளையும் வேணும்னு சொல்றானுங்க 

தாகம் தணிந்தது#அட தண்ணி குடிச்சேன்னு சொல்ல வந்தேன் 

வயலில் களை எடுக்குரவங்கள போய் என்ன பெருசா புடுங்கிட்டன்னு கேக்க முடியாது

நல்ல காதல் டு கள்ள காதல். வழி திருமணம் 

ரூம் கொடுத்து நெட் கொடுத்து அப்பப்ப சரக்கு வாங்கி கொடுத்து எங்கள பத்திரமா பாத்துக்கும் நண்பனின் கருணையே கருணை

No comments:

Post a Comment